- தீமிதி திருவிழா
- அங்கலமான் கோயில்
- மலையனூர்
- மெல்மலையனூர்
- மாசி பெரு விழா
- மேலையனூர்
- விலப்புரம் மாவட்டம்
- Chenchi
- தெமிடி விழா
- அன்னகாளியம்மன் கோயில்
- Melmalayanur
மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழா கடந்த 1ம்தேதி தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளான நேற்று கோயில் வளாகத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து அக்னி குளத்தில் நீராடி கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….
The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.