×

தமிழகத்தில் கனமழை எதிரொலி: காரைக்கால் உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிப்பு ..!

சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மொத்தம் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக, தெற்கு ஆந்திர, கேரள கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது….

The post தமிழகத்தில் கனமழை எதிரொலி: காரைக்கால் உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிப்பு ..! appeared first on Dinakaran.

Tags : Nadu ,Karaikal ,Chennai ,Thiruvarur ,Thoothukudi ,Trichy ,Nolla ,Thanjana ,Nagai ,Mayiladuthura ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...