×

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

ஆவடி: கடனை திருப்பி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால், தங்க நகைகளை செய்யும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் சுப்பிரமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பழனி(42). தங்க நகைகளை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையில் பழனி, தனது தொழிலை அபிவிருத்தி செய்ய அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 2 லட்சம் பெற்றிருந்தார். பின்னர், அவருக்கு தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், அந்த பணத்தை  திரும்பத்தர முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடன் ெகாடுத்தவர் திரும்பக்கேட்டு பழனிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதனால், அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாம் வின்சென்ட் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Thirumullaivale ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்