×

பக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..!

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரடி சாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவை சொல்லி வந்தால் எவ்வித இடையூறும் நேராவண்ணம் சாயிபாபா காத்தருள்வார்.சீரடி சாயிநாதர் கவசம்நவமணி மாலை போன்று நன்மை தரும் ஸ்ரீ சாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் பக்தர்கள் சொல்லி வந்தால் எந்த இடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் சாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.சீரடி சாயி திருக்கவசம் யான் பாடக்கார்மேனி ஐங்கரனே காப்புதிருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ சாயிநாதனவன் சிரசைக் காக்கஅருள்வளரும் ஸ்ரீசாயி அமலனவன்நெற்றியினை அமர்ந்து காக்கபொருள் வளரும் ஸ்ரீசாயி புனிதனவன்வதனமதைப் பொலிந்து காக்கதெருள்வளரும் ஸ்ரீசாயி தேவனவன்கண்ணிரண்டும் தினமும் காக்கபுவியிறைஞ்சும் ஸ்ரீசாயி புருவங்கள்இரண்டினையும் புகழ்ந்து காக்கசெவியிரண்டும் ஸ்ரீசாயி சேவகன்தான்எந்நாளும் சேர்ந்து காக்கதவமுனிவன் ஸ்ரீசாயி பாபாஎன்தலைமயிரைத் தழைந்து காக்கநவமணியான் ஸ்ரீசாயி பாபாஎன்நாசியினை நயந்து காக்ககண்கண்ட ஸ்ரீசாயி தெய்வமவன்இருகன்னம் கனிந்து காக்கவிண்கண்ட ஸ்ரீசாயி விமலனவன்கண்டமதை விரைந்து காக்கபண்கண்ட ஸ்ரீசாயி பரமனவன்தோளிரண்டும் பரிந்து காக்கமண்கண்ட ஸ்ரீசாயி மாதவன்என்மார்பகத்தை மகிழ்ந்து காக்கதூயசுடர் வடிவான சாயி அண்ணல்வலதுகரம் துணிந்து காக்கநேயமுறும் ஸ்ரீசாயி நீதனவன்இடதுகரம் நிதமும் காக்கஆயமறை முடிவான சாயிபரன்மணிவயிற்றை அறிந்து காக்கதேயமெலாம் துதிசெய்யும் சாயிவள்ளல்இடுப்பதனைத் தெரிந்து காக்ககுருசாயி பகவனவன் கரவிரல்கள்ஈரைந்தும் குழைந்து காக்கஉரு வோங்கும் ஸ்ரீசாயி உத்தமன் என்பற்களினை உவந்து காக்ககருவோங்கும் ஸ்ரீசாயி பாபாஎன்வளர்நாவை களித்துக் காக்கபெருமானாம் ஸ்ரீசாயி போதனென்றன்நெஞ்சமதைப் பெரிதும் காக்ககனிவுமிகு ஸ்ரீசாயி கடவுளவன்குறியதை எக்காலும் காக்கஇனிமைமிகு ஸ்ரீசாயி இறையவன் என்வலக்காலை இனிது காக்கதனிமைமிகு ஸ்ரீசாயி பதியவன்என்இடக்காலைத் தாவிக் காக்கபனி இருள்தீர் ஸ்ரீசாயி பாபாஎன்பாதவிரல் பத்தும் காக்கஇருதொடையும் ஸ்ரீசாயி ஈசனவன்எஞ்ஞான்றும் இறங்கிக் காக்கதிருமுதுகைப் பிடரியினை ஸ்ரீசாயிவானவன்தான் சிறந்து காக்கதருமதுரை ஸ்ரீசாயி என்வாயும்இதழ் இரண்டும் தவழ்ந்து காக்கஅருநிதியாம் ஸ்ரீசாயி ஆண்டவன் என்அங்கமெலாம் அழகாய்க் காக்ககரியவிழி படைத்தநமன் வருங்காலம்ஸ்ரீசாயி கடிதிற் காக்கபெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்ஸ்ரீசாயி பேணிக் காக்கஅரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்ஸ்ரீசாயி அமைந்து காக்கஉரியவிஷப் பூச்சிகளால் இடரின்றிஸ்ரீசாயி உடனே காக்கஎத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்ஸ்ரீசாயி என்னைக் காக்கபக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்ஸ்ரீசாயி பாபா காக்கமுத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீசாயிஇராமனவன் முன்னே காக்கசித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்ஸ்ரீசாயி சித்தன் காக்க….

The post பக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..! appeared first on Dinakaran.

Tags : Seerdi Sainathar Kavasam ,Seerdi Sainathar Kawasa ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...