×

செனேகல் நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு எதிர்ப்பு: போராட்டத்தின் போது 17 வயது சிறுவன் அடித்து கொலை

தகார்: செனேகல் நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனேகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மானே சோன்கோவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தகார் உட்பட நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் சிறுவனின் மரணத்தால் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மானே சோன்கோ கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post செனேகல் நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு எதிர்ப்பு: போராட்டத்தின் போது 17 வயது சிறுவன் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Senegal ,Takar ,
× RELATED ஆப்ரிக்க தீவு அருகே படகு கவிழ்ந்து...