×

ஆஸ்திரேலியவில் மயக்க மருந்து கொடுத்து பெண் எம்.பி-க்கு பாலியல் வன்கொடுமை

கான்பெரா: கடந்த வார இறுதியில் இரவு நேரத்தில் பிரிட்டானி லாகா(37) பொழுதுபோக்க தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியான மத்திய குயின்ஸ்லாந்தின் யெப்பூனில் வெளியே சென்றபோது, சிலர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய எம்பி பிரிட்டானி லாகா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில்:
இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். எங்களில் பலருக்கு இதுபோன்ற சோகம் நடந்துள்ளது. என்னுடைய உடலில் போதை பொருள் கலந்திருந்தது என்பது மருத்துவமனையில் நடந்த பரிசோதனை முடிவில் உறுதியானது. ஆனால், அவற்றை நான் எடுத்து கொள்ளவில்லை

இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். என்னை தொடர்பு கொண்டு பேசிய பிற பெண்களுக்கும் கூட மயக்க மருந்து செலுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. நம்முடைய நகரில் மயக்க மருந்து கொடுப்பது அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற ஆபத்து இல்லாமல், நாம் மகிழ்ச்சியாக சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபட முடிய வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

சமீப காலமாக, அஸ்திரேலியாவில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிக அளவில் நடந்துள்ளன.

The post ஆஸ்திரேலியவில் மயக்க மருந்து கொடுத்து பெண் எம்.பி-க்கு பாலியல் வன்கொடுமை appeared first on Dinakaran.

Tags : Australia ,Canberra ,Brittany Laga ,Yeppoon, Central Queensland ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...