சென்னை: தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு: ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் மாற்றப்பட்டு மதுரை 6வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே எஸ்.பி., தீபா சத்யன் மாற்றப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.,யாகவும், மதுரை 6வது பட்டாலியன் கமாண்டன்ட் இளங்கோ மாற்றப்பட்டு சென்னை ரயில்வே எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கடலோர காவல் குழுமம், ராமநாதபுரம் எஸ்.பி.,யாக இருந்த ஜெயந்தி மாற்றப்பட்டு சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாகவும், சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.,யாக இருந்த மகேஷ்குமார் மாற்றப்பட்டு நில அபகரிப்பு தடுப்பு- சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி கல்பனா நாயக் இடமாற்றம் செய்யப்பட்டு ரயில்வே ஐ.ஜி.,யாகவும், கல்விப் பயில விடுப்பில் சென்றிருந்த ஐ.ஜி அபின் தினேஷ் மொடக் மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது….
The post 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.