×

கடையில் கள்ளநோட்டு மாற்றியவர் கைது

ஆவடி: ஆவடி கவுரிப்பேட்டை பழக்கடை தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ்(29). ஆவடி புதிய ராணுவச்சாலை மாநகராட்சி அலுவலகம் எதிரில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் ரூ.500ஐ கொடுத்து ரூ.100க்கு பழம் கேட்டுள்ளார். அப்போது அந்த பணம் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. வாலிபரை பிடித்துஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், பெரம்பூர் கேசி கார்டன் பகுதியை சேர்ந்த சிவா(34). கட்டிடத்தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து இவருக்கு கள்ளநோட்டு கொடுத்த பெரம்பூரை சேர்ந்த சலீம் என்பவரை தேடிவருகின்றனர்….

The post கடையில் கள்ளநோட்டு மாற்றியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Awadi ,Pakiyaraj ,Gaurippet Habitat Street ,New Military Corporation Office ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்