×

‘பாரத் பந்த்’ தெலுங்கு நடிகர் சென்னையில் மரணம்

ஐதராபாத்: கோடி ராமகிருஷ்ணா தெலுங்கில் இயக்கி, பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘பாரத் பந்த்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் காஸ்ட்யூம் கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான காஸ்ட்யூம் கிருஷ்ணா சென்னையில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். தெலுங்கு படங்களில் குணச்சித்திரம், வில்லன், காமெடி போன்ற வேடங்களில் நடித்துள்ள காஸ்ட்யூம் கிருஷ்ணா, திரைத்துறையில் பிரபலங்களின் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது இயற்பெயர், மாதாசு கிருஷ்ணா. கடந்த 1954ல் ஆடை வடிவமைப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தொடர்ந்து என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, வாணி, ஜெயசுதா, ஜெயப்பிரதா, தேவி உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிமைப்பாளராகப் பணியாற்றினார். அவரை ‘பாரத் பந்த்’ படத்தில் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா வில்லனாக அறிமுகம் செய்தார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த காஸ்ட்யூம் கிருஷ்ணாவின் மறைவு, தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில்
ஆழ்த்தியுள்ளது.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...