×

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரின் போலீஸ் காவல் ஜூலை 27 வரை நீட்டிப்பு : ஆபாச படங்களை ரூ. 8.93 கோடிக்கு விற்கப்பட்ட ஆவணங்களும் சிக்கின!!

மும்பை : ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஆபாச படங்கள் தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ரா மற்றும் அவரது நண்பர் ரியானின் போலீஸ் காவல் ஜூலை 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனது கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என ராஜ் குந்த்ரா மும்பை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். ஆபாச படங்கள் மூலம் ராஜ் குந்த்ரா சம்பாதித்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜ் குந்த்ராவின் யெஸ் வங்கி கணக்கு மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் ஆப்ரிக்கா வங்கி கணக்குகளை ஆராய வேண்டிய தேவை இருப்பதாகவும் நீதிமன்றத்தில் மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. ராஜ்குந்த்ராவின் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்ததில் 121 ஆபாச படங்களை 8 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கு விற்றதற்கான ஆவணங்கள் கிடைத்து இருப்பதாகவும் காவல் துறை கூறியுள்ளது. இதில் பல சர்வதேச தொடர்புகளும் இருப்பதாக காவல் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மும்பையில் உள்ள ஷில்பா ஷெட்டியின் இல்லத்தில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். …

The post நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரின் போலீஸ் காவல் ஜூலை 27 வரை நீட்டிப்பு : ஆபாச படங்களை ரூ. 8.93 கோடிக்கு விற்கப்பட்ட ஆவணங்களும் சிக்கின!! appeared first on Dinakaran.

Tags : Shilpa Shetty ,Mumbai ,Raj Kundra ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்