- ஆந்திரப் பிரதேசம்
- சென்னை
- கும்பிபூண்டி
- துணை கண்காணிப்பாளர்
- ரமேஷ் உத்தரவின்பார்
- கும்பிபூண்டி
- எலாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வரும் கார், லாரி, வேன், உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தனிப்பிரிவு காவலர் நாராயணன், உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த நெல்லூர் – சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கினர். தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரையும் கீழே இறக்கி சோதனையிட்டனர். அதில் 2 பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் ராஜமந்திரி சேர்ந்த ரத்தினராஜ்(40), சத்தியவாணி(26) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்த வந்ததாக கூறினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்….
The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 20 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.