×

அசோக் செல்வன் படத்தில் 3 ஹீரோயின்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு  வயோகாம் 18 ஸ்டூடியோ நிறுவனம் தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் இதனை இயக்குகிறார்.

அசோக் செல்வனுடன் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.  கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என  இந்தியாவின் பல்வேறு  இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி