×

வெவ்வேறு சம்பவங்களில் சித்தாலப்பாக்கம், ஒரகடத்தில் பெண் உட்பட 2 பேர் தற்கொலை

தாம்பரம்: வெவ்வேறு சம்பவங்களில் சித்தாலப்பாக்கம், ஒரகடத்தில் பெண் உட்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (38). இவரது 2வது மனைவி கவுசல்யா. இவரது மகன் சுதிப் (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் கவுசல்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8ம்தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த சுதிப், திடீரென கதவை பூட்டிக்கொண்டு தாய் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்ததும்  கவுசல்யா பதறியடித்துகொண்டு சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து மகன் சாவுக்கு நீதான் காரணம் கூறி முருகனிடம்   வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மகன் சடலத்தை சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கவுசல்யா எடுத்து சென்று  இறுதி சடங்கு செய்துள்ளார்.இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் நேற்றுமுன்தினம் மது அருந்திவிட்டு, கவுசல்யாவின் செல்போனில் தொடர்புகொண்டு, நீ இங்கு வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார். கவுசல்யா திட்டியதால் முருகன் தனது கையை கத்தியால் அறுத்து கொண்டு டாஸ்மாக் கடை அருகே இருந்த மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தகவலறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: ஒடிசா மாநிலம் ஜகென்யசாலா கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் சாஹூ (32). இவர், குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாத்தூர் பகுதியில்  குடும்பத்துடன் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து  வருகிறார்.  இவரது மனைவி கஜோல் சாஹூ (28). இவர்களுக்கு ரேஷப் சாஹூ (2), ஆரப் சாஹூ (1) அகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தையை உமேஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் இருந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கஜோல் சாஹூ தனது தாய்க்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமேஷ், மனைவியை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கஜோல் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  கஜோல் சாஹூ சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வெவ்வேறு சம்பவங்களில் சித்தாலப்பாக்கம், ஒரகடத்தில் பெண் உட்பட 2 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chittalapakkam ,Oragad ,Tambaram ,Thambaram… ,Chitalapakkam ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!