×

பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மகன் நாடு திரும்பினார்

இஸ்லாமாபாத்: பண மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் நேற்றிரவு நாடு நிரும்பினார்.பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அவரது இரண்டு மகன்கள் ஹம்சா மற்றும் சுலைமான் மீது பண மோசடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இதில் சில விசாரணைகளுக்கு மட்டும் நேரில் ஆஜரான ஷெபாஸின் 2வது மகன் சுலைமான் தனது குடும்பத்துடன் 2018ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்று விட்டார்.  இதனிடையே, சுலைமானின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்  சுலைமானை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததுடன் அவர் நாளை நீதிமன்றத்தில் சரணடைய கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த சுலைமான் ஷெபாஸ் நேற்று நள்ளிரவு நாடு திரும்பினார். …

The post பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மகன் நாடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Shebaz Sharif ,Islamabad ,Sulaiman ,London ,Pakistan ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா