×

ஓடிடி பற்றி வாணி போஜன்

தமிழில் வெளியான ‘ஓர் இரவு’, ‘அதிகாரம் 79’, ‘ஓ மை கடவுளே’, ‘லாக்கப்’, ‘மலேஷியா டூ அம்னீஷியா’, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஆகிய படங்களில் நடித்தவர், வாணி போஜன். தெலுங்கில் ‘பிரேமா’, ‘மீ மாத்ரமே செப்தா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘காஸினோ’, ‘மகான்’, ‘தாழ்திறவா’, ‘ஊர் குருவி’, பரத்துடன் ஒரு படம், விதார்த்துடன் ஒரு படம் என 8 படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்ததில் சில படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்களைப் போல் திரைத்துறைக்கு புதிதாக வரும் நடிகர், நடிகைகளுக்கு ஓடிடி தளம் மிகப்பெரிய சாதகமாக இருக்கிறது.

தியேட்டர்களுக்கு மாற்றாக ஓடிடி தளம் அமைந்துள்ளது என்றாலும், சில படங்களை தியேட்டர்களில் பார்த்து ரசிப்பது தனி அனுபவம் என்பதை மறுக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் சினிமா படங்களுக்கு நிகராக வெப் தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு பெரும்பான்மையான ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகின்றனர். இது எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது உண்மை. நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகி தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வெப் தொடர்கள் வாய்ப்பளிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை’ எனறார்.

Tags : Vani Bojan ,
× RELATED வெப்சீரிஸ் இயக்குகிறார் ராதாமோகன்