×

பாலிசியை மாற்றிய சமந்தா

தமிழில் படங்களே இல்லாததால், தெலுங்கில் டி.வி நிகழ்ச்சி நடத்தச் சென்றுவிட்டதாக சமந்தா பற்றி செய்தி வெளியானது. ஆனால், தன்னைப் பற்றி வெளியாகும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதில்லை, நன்றி தெரிவிப்பது இல்லை என்ற பாலிசியை சில வருடங்களாக அவர் கடைப்பிடித்து வருவதால், எது பற்றியும் விளக்கம் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தன் காதலி நயன்தாராவை மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைத்து இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தார். அப்போது படத்தின் கதைப்படி நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், சமந்தாவுக்கு மிகவும் சிறிய கேரக்டர் என்றும் கூறப்பட்டது. இதையறிந்த சமந்தா, இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியானது.

ஆனால், இந்த தகவலை உடனடியாக விக்னேஷ் சிவன் தரப்பு மறுத்தது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா நடிப்பது உறுதி என்றும், அவர் விலகவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதன்படி படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் சமந்தா கலந்துகொண்டார். அவருக்கு விக்னேஷ் சிவன் பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் வீடியோவில், சமந்தாவுக்கு மேக்கப் போடுவது மற்றும் அவர் விக்னேஷ் சிவனிடம், ‘என் சீன்களை சீக்கிரம் ஷூட் பண்ணி முடிச்சிடுவீங்க இல்லையா?’ என்று கேட்பதையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அதுபோல், விஜய் சேதுபதிக்கும் விக்னேஷ் சிவன் பூச்செண்டு கொடுத்து வரவேற்கிறார். இதை உதவி இயக்குனர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு, இதுவும் ஒருவிதமான பப்ளிசிட்டி என்று திரையுலகுக்கு சொல்லி இருக்கின்றனர்.

Tags : Samantha ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா