×

போதை பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஜாமீன் மனு தள்ளுபடி

கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் மற்றும் போதை பொருள் சப்ளை தொடர்பாக நடிகை ராகிணி, சஞ்சனா உள்பட 18 பேர் கைதாகியுள்ளனர். அனைவரும் பெங்களூரு பரப்பன அகரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நடிகை ராகிணி, சஞ்சனா, வீரேன் கண்ணா உள்பட 6 பேர் கடந்த 24ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சீனிவாஸ் முன்னிலையில் நேற்று நடந்தது.

ராகிணி தரப்பு வக்கீல், ‘‘நடிகை ராகிணி கடந்த 61 நாட்களாக பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால், 15 நாட்கள் கழித்துதான் அவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியும். அதுவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானதால், உச்சநீதிமன்றத்தில்தான் அவர்கள் இனி முறையிட முடியும்.

Tags : Actresses ,Ragini ,Sanjana ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’