×

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் விஜய் பட தயாரிப்பாளருக்கு மூன்று மாத சிறை தண்டனை

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் 2007ம் ஆண்டு அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார். இந்தநிலையில் அப்போது படத்தின் வெளியீட்டுக்காக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம், அப்பச்சன் 15 நாளில் திருப்பி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

தொடர்ந்து இந்த பணத்தை திருப்பி கொடுக்கும் வகையில், அப்பச்சன் காசோலை கொடுத்துள்ளார். அதனை செலுத்திய போது வங்கி கணக்கில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் அப்பச்சன் மீது கடந்த 2008ம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்ராஜ், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால், ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர். அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஒரு கோடி ரூபாயை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : filmmaker ,Vijay ,SA Chandrasekhar ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...