×

ஸ்ருதிஹாசன் பில்டப் செய்வது ஏன்? எஸ்.பி.ஜனநாதன்

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா நடித்துள்ள படம், லாபம். இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கூறியதாவது: எது லாபம் என்பதை படம் சொல்லும். ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு சேர வேண்டிய தொகைதான் லாபம். உலகிலுள்ள எல்லா தொழில்களும் இயங்க மூல காரணமே விவசாயம்தான். சேற்றில் விவசாயி கால் வைத்தால்தான் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும். நெல் விளையும் பூமி தற்போது செழிப்பற்று கிடக்கிறது. 

அதற்கு என்ன காரணம் என்று அறிந்து, அந்த பூமியை பக்கிரி என்ற விஜய் சேதுபதி எப்படி மாற்றுகிறார் என்பது கதை. எதற்கெடுத்தாலும் பில்டப் செய்யும் கிளாரா என்ற டான்சராக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இமான் இசையில் யுகபாரதி எழுதியுள்ள ‘யாழா யாழா’ என்ற பாடலையும் பாடியுள்ளார். தனது பில்டப் கேரக்டர் பிடித்ததாலேயே சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடிப்பதாக சொன்னார். சாய் தன்ஷிகா வில்லியா என்பது சஸ்பென்ஸ். கதை சம்பந்தமாக நம்மாழ்வார், நெல் ஜெயராமனிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

Tags : Sruthihaasan ,S.P.Janathan ,
× RELATED அரை நிர்வாண படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்: குவியும் கண்டனம்