கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனித்திருக்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்கு பிடித்தவைகளை செய்து பொழுதுபோக்கி வருகிறார்கள். பாடல் வெளியிடுவது, செல்போன் படத்தில் நடிப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என ஈடுபட்டு வருகிறார்கள். மலையாள நடிகர் மம்மூட்டி சற்று வித்தியாசமாக போட்டோகிராபராக மாறி உள்ளார். வீட்டிலிருந்தபடியே தனது விலை உயர்ந்த கேமராவை கொண்டு வீட்டுக்கு வரும் பறவைகள், சின்ன சின்ன விலங்குகள், புழு, பூச்சிகள், வீட்டு தோட்டத்தில் உள்ள மலர்களை அழகான படங்களாக எடுத்து தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். காலை விருந்தாளிகள் என்று இந்த படங்களுக்கு தலைப்பிட்டுள்ளார்.