×

கொரோனா மீது ரைசா கோபம்

தமிழில் எப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்து வருகிறார் ரைசா வில்சன். இதே படத்தில் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள். 3 ஹீரோயின்கள் கேரக்டர் என்றாலும் தனது வேடத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார் ரைசா. இந்த படத்தில் முஸ்லிம் பெண்ணாக அவர் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ரைசா கூறும்போது, ‘படப்பிடிப்புக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பது வருத்தமாக இருக்கிறது. எனது வேலையை நான் செய்யாமல் இருக்கிறேன் என்பது போன்ற உணர்வில் இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம், கொரோனாதான். இந்த வைரஸ் ஏதோ ஒரு லேபிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், நானே அந்த லேபிற்கு சென்று, சம்பந்தப்பட்டவர்களை சும்மா விட மாட்டேன்’ என தெரிவித்துள்ளார். கடும் கோபத்தில் இருப்பதாலேயே ரைசா இப்படி சொல்லியிருக்கிறார் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

Tags : Raisa ,Corona ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...