×

பத்திரிகையாளர்களை விமர்சித்த குஷ்பு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக 70 நாட்களாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியது. இதை தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளரும், நடிகையுமான குஷ்பு சங்க உறுப்பினர்களுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பி உள்ளார் அதில் அவர் “முக்கியமான ஒரு விஷயம் பிரஸ்காரங்க கண்டிப்பாக எங்கே இருந்தாவது வந்துருவாங்க. போட்டோ, எடுக்கிறதுக்கு, வீடியோ எடுக்கிறதுக்கு, கிழிக்கிறதுக்குண்ணே அவன் உட்கார்ந்திட்டிருப்பான். பிரஸ்காரனுக்கு இப்போ எந்த ஒரு நியூசும் கிடையாது. கோவிட் தவிர, ஷூட்டிங் ஆரம்பிச்ச உடன நம்பள பற்றி ஏதாவது போடுறதுக்கு காத்திட்டிருப்பாங்க. தயவு செய்து பாதுகாப்பா இருங்க” என்று கூறியிருக்கிறார். குஷ்புவின் இந்த பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Khushboo ,journalists ,
× RELATED பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே...