×

குறவன் – குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனத்தை தடுக்க டிஜிபி தரப்பில் சுற்றறிக்கை:அரசுக்கு ஐகோர்ட் கிளை யோசனை

மதுரை: குறவன் – குறத்தி ஆட்டம் எனக்கூறி ஆபாச நடனம் ஆடுவதை தடுக்க சுற்றறிக்கை அனுப்ப முடியுமா என்பது குறித்து, அரசு தரப்பில் விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த முத்து முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்: தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான குறவர் பழங்குடி சமூகத்தினர் உள்ளனர். தமிழகத்தில் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன்-குறத்தி ஆட்டம் நடக்கிறது. சமீபகாலமாக இந்த ஆட்டத்தில் ஆபாச நடனங்களும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகளவு இடம் பெறுகின்றன. இது குறவர் சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே,   ஆபாசமான முறையில் குறவன் – குறத்தி ஆட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். போலீசார் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன்-குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் , ‘‘பல்வேறு ஆடல் – பாடல் குழுவினர் குறவன் – குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனங்களை ஆடுவது தெரிகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. எந்த சமூகத்தினரும் எவராலும் அவமதிக்கப்படக் கூடாது. குறவன் – குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுத்திடும் வகையில் டிஜிபி தரப்பில் சுற்றறிக்கை அனுப்ப முடியுமா என, அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 1க்கு தள்ளி வைத்தனர். …

The post குறவன் – குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனத்தை தடுக்க டிஜிபி தரப்பில் சுற்றறிக்கை:அரசுக்கு ஐகோர்ட் கிளை யோசனை appeared first on Dinakaran.

Tags : DGP ,Madurai ,ICourt ,
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!