×

கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி தாமோதரன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி இரவு 10 மணியளவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தாமோதரன் நகர் 3வது தெரு வழியாக வந்த 3 வாலிபர்கள், இவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அப்போது, நடராஜன் பணம் தர மறுக்கவே, அவர்களிடமிருந்த கத்தியை காட்டி மிரட்டி நடராஜனை தாக்கி விட்டு, அவரிடமிருந்து 500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, நடராஜன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 6வது தெருவை சேர்ந்த கவுதம் (22), என்ற வாலிபரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இவரது நண்பர்களான வாசு, பிரதீப் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கவுதமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Walier ,Perampur ,Valibar ,Vyasarbadi ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு