×

கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு குழு அமைத்து விரிவாக விசாரிக்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பிற்கு தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறுவது, அரசு சார்பில் வீடு மற்றும் நிதி வழங்கியது வரவேற்க தர ஒன்றியதாகும். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக குழு அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட டாக்டர்களை சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது.கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. முக்கிய காரணமாக மருத்துவர்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருந்தால் கவனக்குறைவுகள் அதிகரிக்கும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு ஏற்றவாறு மருத்துவர்களையும், செவிலியர்களையும் நிரந்தரமாக நியமிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு 24 மணி நேரமும் பணிகள் வழங்க கூடாது. அது அவர்களின் உடலையும் மனதையும் சோர்வடை வைக்கிறது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைக்கிறார்கள். மருத்துவ காப்பீட்டு மூலம் வருவாய் ஈட்டுவதற்கு இதுபோன்று நடைபெற்று வருகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சை வழங்காமல் அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்க வேண்டும். இவ்வாறு  தெரிவித்தார்….

The post கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு குழு அமைத்து விரிவாக விசாரிக்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Priya ,Doctors Association ,Chennai ,Ravindranath ,general secretary ,Association of Doctors for Social Equality ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...