×

தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை குடிபோதையில் நண்பர்களுடன் வந்த மாணவன் கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, நேற்று செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் ரமேஷ், மாநில பொதுச்செயலாளர் எழிலரசன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் உதயகுமார், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ச்செல்வன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை ஆசிரியரின் நிலை மற்ற ஆசிரியர்களுக்கு நேரிடக்கூடாது. தலைமை ஆசிரியரை தாக்கியவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும். இதைத் தவிர்க்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Villupuram District ,Kandamangalam Government Higher Secondary School ,Headmaster ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!