×

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய மாநகர பேருந்து

புழல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாநகர பேருந்து (த.எ.57), நேற்று மாலை 20 பயணிகளுடன் ஞாயிறு கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கண்ணியம்பாளையம் அருகே குறுகிய சாலையில் செல்லும்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த வயலில் ஒருபுறம் இறங்கி கவிழும் நிலை ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் ஓடிவந்து, பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து, சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய மாநகர பேருந்து appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Jnairu village ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...