×

பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்: பாஜகவுக்கு தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்

சென்னை : ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்களை பரப்பி பா.ஜ.க. போராட்டம் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு பால் நிற்பதியாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். பின்னர் செய்தியர்களிடம் பேசிய பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் ஆர்.ராஜேந்திரன் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டதாக தெரிவித்தார். ஆவின் நிர்வாகம் மீது அவதூறு பரப்பும் பா.ஜ.கவை கண்டிப்பதாக அவர் கூறினார். ஆவின் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்ய வேண்டாம் என ஆர்.ராஜேந்திரன் கேட்டு கொண்டார். கொரோனா காலத்திலும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார். உற்பத்தியாளர்களை கொண்ட லாபம் நோக்கம் உள்ள நிறுவனமாக ஆவின் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.   …

The post பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்: பாஜகவுக்கு தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Avin ,J. c. Tamil Nadu Dairy Farmers Welfare Association ,
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...