×

டிவிட்டர் மூலம் பாடகரான பார்வையற்ற வாலிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டங்கரை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இந்த வாலிபர் பார்வையற்றவர். சிறுவனாக இருந்தபோதே தாயை இழந்துவிட்டார். நன்றாக பாடும் திறமை கொண்ட திருமூர்த்தி, தனது கிராமத்தில் பாடல்களுக்காக பிரபலம். இவர் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடியிருந்தார்.

இந்த பாடலை அவரது நண்பர் டிவிட்டரில் வெளியிட்டார். இதை பார்த்த இசையமைப்பாளர் இமான், இந்த இளைஞரை தொடர்புகொள்வது எப்படி என கேட்டிருந்தார். திருமூர்த்தியின் தொடர்பு எண்ணை அவரது நண்பர் அளித்தார். இதையடுத்து தனது படத்தில் அவரை பாட வைப்பதாக இமான் உறுதி அளித்துள்ளார்.

Tags :
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்