×

உத்தரபிரதேசத்தில் மூலிகை டீ குடித்த 5 பேர் பலி

மெயின்புரி: உத்தரபிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (35). இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர். அவர்களுக்கு சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த டீயை, சிவானந்தம், அவரது மகன்கள், மாமனார், உறவினர்கள் உட்பட அனைவரும் அருந்தி உள்ளனர். மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிவானந்தம் உள்பட 5 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிவானந்தத்தின் மனைவி கொடுத்த மூலிகை டீயில் விஷத்தன்மை இருந்ததால், அவர்கள் 5 பேரும் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்….

The post உத்தரபிரதேசத்தில் மூலிகை டீ குடித்த 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Mainpuri ,Sivanandham ,Nakla Khankai village ,Sivananda ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள்...