×

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 108 ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதிய விபத்தில் 20 வயது கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது 55 வயது தாயார் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே நெஞ்சத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா, க/பெ.குமரேசன் என்பவரை அவரது பிரசவத்திற்காக உறவினர்களுடன் நெஞ்சத்தூர் கிராமத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லும் போது ஊத்திகுளம் அருகே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக கர்ப்பிணிப் பெண் திருமதி.நிவேதா மற்றும் அவரது தாயார் திருமதி. விஜயலட்சுமி, க/பெ.கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். மேலும் இதே விபத்தில் காயமடைந்த அவ்வாகனத்தில் இருந்த 3 நபர்களுக்கு சிவகங்கை மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அரசு மருத்துவக் கல்லூரிஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

The post சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,CM ,M.K.Stal ,Chennai ,Sivagangai district ,Chief Minister ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி