×

நெருங்கும் தேர்தல்!: இலவசங்களால் நாடு கெட்டுப்போவதாக சொன்ன பிரதமர் மோடி, குஜராத்தில் சமையல் கேஸ் இலவசமாக தரப்படும் என அறிவிப்பது ஏன்?.. கி. வீரமணி சாடல்..!!

சென்னை: தேர்தல் நேரத்தில் பாஜக யுக்தியை மாற்றுவதாக திராவிட கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இலவசங்களால் நாடு கெட்டுப்போவதாக சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் சமையல் கேஸ் இலவசமாக தரப்படும் என அறிவித்துள்ளார். குஜராத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் இலவச சமையல் எரிவாயுவை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில் யுக்திகளை மாற்றுகிறார்கள்; வாக்காளர்களே ஏமாறாதீர்! வீழ்த்திடுவீர்! எனவும் கூறியுள்ளார். குஜராத்தில் பாஜக வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலையில் அங்கு வித்தை தேவைப்படுகிறது என்ற ஊகம் உண்மையாகிவிட்டது. இலவசத்தை எதிர்த்தவர்கள், இப்பொழுது சமையல் எரிவாயு இலவசம் என்று அறிவிப்பது ஏன்? எனவும் கி. வீரமணி சாடியுள்ளார். குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனிடையே குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயுவுக்கு 10 சதவீத வாட் வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய தேர்தல் நேரத்தில் பாஜக யுக்தியை மாற்றுவதாக தி.க. தலைவர் கி. வீரமணி குறிப்பிட்டிருக்கிறார்….

The post நெருங்கும் தேர்தல்!: இலவசங்களால் நாடு கெட்டுப்போவதாக சொன்ன பிரதமர் மோடி, குஜராத்தில் சமையல் கேஸ் இலவசமாக தரப்படும் என அறிவிப்பது ஏன்?.. கி. வீரமணி சாடல்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Gujarat ,K.K. ,Veeramani Sadal ,Chennai ,Drawidi Club ,Bajaka ,Yukti ,Veeramani ,Modi ,K.K. Veeramani Sadal ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...