×

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படும் சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே. படம் மே 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சூர்யா என்.ஜி.கே. படம் பற்றியும், செல்வராகவன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசுகையில் அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல்.

இயக்குனர் செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வது போல் சொல்லி கொடுத்து நடிக்க வைத்தார். செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் சரி நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. அவரது இயக்கத்தில் நடித்தது மாறுபட்ட அனுபவமாக இருந்தது. யுவனின் இசையைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும். காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு ஃபோனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்த மிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி கணவன், மனைவி போல இருக்கும். என்னுடைய சினிமா பயணத்தில் ‘NGK’ ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். கடைசியாக இயக்குனர் செல்வராகவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அடுத்த படம் எடுக்கும்போது என்னையே நடிக்க வையுங்கள்’’ என்றார்.

Tags : Surya ,Selvaraghavan ,
× RELATED தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர்...