×

இனி தடுக்க முடியாது... இயக்குனர் ரஞ்சித்

சமுத்திரக்கனி, சாந்தினி நடித்திருக்கும் பற படத்தை இயக்குகிறார் கீரா. இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் பேசினார் இயக்குனர் ரஞ்சித். ‘ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைபற்றிய சினிமாவை எடுக்க பல காலமாக தயங்கி வருகின்றனர். அட்டகத்தி படத்துக்கு பிறகு அந்த பாணியிலான படங்கள் பேசப்படத் தொடங்கியிருக்கிறது. பரியேறும் பெருமாள் படக் கதையை இங்குள்ள பெரிய தயாரிப்பாளர்கள் அத்தனைபேரிடம் சொல்லியும் யாரும் தயாரிக்க முன்வரவில்லை, கமர்ஷியலாக இருக்காது...

இதுபோல் படம் எடுத்தால் யாராவது ஏதாவது சொல்வார்களோ எதுக்கு வம்பு என்று ஒதுங்கி நின்றனர். கடைசியில் அப்படத்தை நான் தயாரித்தேன். கமர்ஷியல் ரீதியாக வெற்றியானது. இந்த படத்துக்கு பிறகு தற்போது கமர்ஷியல் என்ற பெயரில் உருவாகும் படங்களில் கூட ஜாதிய பாகுபாடுகளை களைய வேண்டியது பற்றி பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் இதுபற்றி பேசப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தேன், பேச ஆரம்பிச்சிருக்காங்க... சந்தோஷமா இருக்கு.. இனி தடுக்க முடியாது... நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இயக்குனர் கீரா இயக்கிய ‘பற’ படத்தில் இடம்பெறும் முருகேசன், கண்ணகி கதாபாத்திரங்கள் என் நெஞ்சில் நிலைத்துவிட்டது. ஆணவக்கொலையை பற்றியும் இப்படம் பேசுகிறது. இதுவும் ஒரு மைல்கல் படமாக அமையும்’ என்றார்.

Tags : Ranjith ,
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி