சென்னை: ஓட்டேரி மயான பூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் வரும் 15ம்தேதி வரை இந்த மயான பூமி இயங்காது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, அண்ணாநகர் மண்டலம், வார்டு-99, ஓட்டேரி மயான பூமியில் வருடாந்திர பராமரிப்பு பணி மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று முதல் வரும் 15ம்தேதி வரை தற்காலிகமாக இந்த மயானபூமி இயங்காது. மேலும், பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் உடல்களை புதைப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்படும். உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு, அரும்பாக்கம் மற்றும் வில்லிவாக்கம் எரிவாயு மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …
The post 15ம்தேதி வரை இயங்காது ஓட்டேரி மயான பூமியில் இன்று முதல் பராமரிப்பு பணி: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.