×

மறுபிறவி இல்லாத முக்தியை பெற அங்காள பரமேஸ்வரியின் மந்திரம்..!!

மாதம் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று காலை 10 முதல் 12 மணி வரை உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் இருக்க வேண்டும். அங்கு அன்னையின் சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 108 தட்சணை தர வேண்டும். இவ்வாறு நூத்தி எட்டு மாதங்கள் தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலமாக அங்காள பரமேஸ்வரி அன்னையின் திருப்பாத தரிசனம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தேடிவரும்.

நீங்கள் மிகுந்த புண்ணிய ஆத்மாவாக இருந்தால் 108 வெள்ளிக்கிழமைகளுக்குள் அன்னையின் அருள் கிடைக்கும்.  

மறுபிறவி இல்லாத முக்தியை நினைத்து ஏங்கும் ஒவ்வொருவரும் இந்த பாடலை தினமும் ஜெபிக்கலாம்.

“பாத நினைவே எனக்கென்றும் வேண்டும் வேறு எது நினைவும்
காததூரம் ஓடிட வேண்டும் நின் நினைவு என்றும்
சேதமுறாது செம்மலர் பாத நின் நினைவே வேண்டும்
நின் பாதமே என் பல பிறவி அழிக்க வந்ததே!”

Tags : Angala Parameshwari ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம்...