×

ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடை ஏற்படுத்த நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசும் நடைபெற இருக்கிற சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இது தொடர்பாக நிரந்தர சட்டத்தை நிறைவேற்றி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்ற உறுதியான நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்ய முயற்சிகள் மேற்கொண்ட அப்போதைய அதிமுக அரசுக்கும், தற்போது அவசர சட்டம் கொண்டுவந்த தமிழக அரசுக்கும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி தமிழகத்தில் தடை என்பதற்கேற்ப ஒப்புதல் அளித்திருக்கும் ஆளுநருக்கும் த.மா.கா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்….

The post ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடை ஏற்படுத்த நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G. K.K. Vasan ,Chennai ,State Congress ,G.P. K.K. ,Vassan ,Governor ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...