- சத்யராஜ்
- சென்னை
- ஒய்.ஜி.மகேந்திரன்
- Samuthirakani
- சுஹாசினி
- தலைவாசல் விஜய்
- ரம்யா பாண்டியன்
- ராஜ் அய்யப்பன்
- மதுவந்தி
- லிவிங்ஸ்டன்
- ஜெயப்பிரகாஷ்
- ரித்விக்
- அருண்.ஆர். சுரேஷ் கிருஷ்ணா
- வெங்கட்
- தேவா…

சென்னை: ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், ரித்விக் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. அருண்.ஆர் தயாரித்துள்ளார். வெங்கட் எழுதிய கதைக்கு சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தேவா இசை அமைக்க, பா.விஜய் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாததால், சத்யராஜ் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அது வருமாறு: இப்படத்தில் எனது கேரக்டர் பற்றி சுரேஷ் கிருஷ்ணா சொன்னவுடனே நடிக்க சம்மதித்து விட்டேன். பா.விஜய் எழுதிய வசனங்கள் சிறப்பாக இருந்தது. இதில் மிகச்சிறப்பாக நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.
முக்கிய கேரக்டரில் தலைவாசல் விஜய் நடித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா அதுபற்றி முன்பே சொல்லியிருந்தால், அதில் நான் நடித்திருப்பேன். அவ்வளவு சிறப்பு வாய்ந்த கேரக்டர் அது. தற்போது அதிகமான ஹீரோயிசம் இருந்தால்தான் படம் வெற்றி அடையும் என்ற நிலை மாறிவிட்டது. சமீபத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மாமன்’, ‘மெட்ராஸ் மேட்னி’ போன்ற படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல கதை இருந்தால், படம் ஓடி வெற்றிபெறும் என்று இப்படங்கள் நிரூபித்துள்ளன.
