×

பொள்ளாச்சி அருகே 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவார்கள். இதில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தனியாக செல்லும் நேரத்தில், மளிகை கடை உரிமையாளர் நடராஜன் (62), அவர்களிடம் ஆபாசமாக பேசுவதுடன்,  தொட்டுப் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு சம்பவத்தன்று பாலியல் குறித்த விழிப்புணர்வு பற்றி விளக்கினார். அப்போது 13 வயது மாணவி, தலைமை ஆசிரியையிடம் மளிகை கடைக்காரர் பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்தார். மேலும் 14 மாணவிகளும் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொலை கொடுத்ததாக தெரிவித்தனர்.இதை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான தலைமை ஆசிரியை, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், நடராஜனை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், பள்ளி மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர்….

The post பொள்ளாச்சி அருகே 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Grocer ,Pollachi Pollachi ,Pollachi ,Pocso ,Coimbatore ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்