×

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் பாடம் ஆசிரியர் போக்சோவில் கைது

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் பாடம் நடத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம்  திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் கடந்த வாரம் குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணை தொடர்புகொண்டு, அக்கவுண்டன்சி ஆசிரியர் கிறிஸ்துதாஸ் வகுப்பில்  பாடத்திற்கு சம்மந்தமில்லாமல் பாலியல் பாடம் நடத்தியதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பள்ளியின் முன்பு மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் 2 மாணவிகளும் பெற்றோருடன் குளச்சல் மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். ஆனால், 10 நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நேற்றுமுன்தினம் நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இதையடுத்து குளச்சல் மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் 2 வழக்குகளை பதிந்து விசாரணை நடத்தி ஆசிரியர் கிறிஸ்துதாசை கைது செய்தனர்….

The post அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் பாடம் ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Govt. ,Kulachal ,Thingalnagar ,Kanyakumari district ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது