×

கல் குட்டையில் மூழ்கி மாணவன் பலி

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த கோவூர், அணுகார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பராக உள்ளார். இவரது மகன் பிரசன்னா(15). இவர், கோவூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் பிரசன்னா தனது வீட்டின் அருகே வசித்து வந்த நண்பர்கள் சிலருடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். நண்பர்கள் அனைவரும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த நிலையில், இவருக்கு நீச்சல் தெரியாததால் கரையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்ற போது, எதிராராத விதமாக நீரில் மூழ்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அனைவரும், இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து நைசாக சென்று விட்டனர்.இந்த நிலையில், நேற்று காலை வரை தனது மகன் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சத்யா, தனது மகன் காணாதது குறித்து, அவரது நண்பர்களிடம் கேட்ட போது தான், அவர் கல்குவாரியில் குளிக்கும்போது, மாயமானது தெரிய வந்தது. தகவலறிந்த மாங்காடு போலீசார் விரைந்து வந்தனர். பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து, போலீசாரும் நீரில் மூழ்கிய பிரசன்னாவை தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பின் நேற்று பிரசன்னா சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post கல் குட்டையில் மூழ்கி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Satya ,Antamgarden ,Kovoor ,Kunradthur ,Vadapalani, Chennai ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...