×

வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குழுவுக்கு சசி தரூர் கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்ற வாக்காளர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிடக் கோரி காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு சசிதரூர் கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடக்க உள்ளது. இம்முறை ராகுல் உள்ளிட்ட காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது. ராகுல் போட்டியிடாத பட்சத்தில் ஜி 23 தலைவர்கள் சார்பாக திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.இதற்கிடையே, தேர்தலில் யார் வாக்களிக்க உள்ளனர் என்பதற்கான வாக்காளர் பட்டியலை வெளியிடக் கோரி சசிதரூர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சசிதரூர்  மற்றும் அசாம் எம்பி பிரத்யூத் போர்டோலி ஆகியோர் கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளார். முன்னதாக, மிஸ்திரி அளித்த பேட்டியில், ‘கட்சியின் அரசியலமைப்புபடி, வாக்காளர் பட்டியலை பொது வெளியில் வெளியிட முடியாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவை வழங்கப்படும்,’ என தெரிவித்தார். புதிய தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும்.* பாஜ தலைவர் நட்டா தேர்வானது எப்படி?காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் நேற்று அளித்த பேட்டியில், ‘தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. பாஜ.வில் அமித்ஷா தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டார், ஆனால், நட்டா எந்த தேர்தலில் வென்றார் என யாராவது கேட்டுள்ளீர்களா?’ என கூறி உள்ளார்….

The post வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குழுவுக்கு சசி தரூர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sasi Tharoor ,New Delhi ,Congress ,Sasi Taroor ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி