- மாஜி அட்ரிகாக்கா
- சட்டமன்ற உறுப்பினர்
- பாஜா
- உசிலம்பட்டி
- மதுரை மாவட்டம்,
- உசிலிம்பட்டி மண்டலம்
- தபால் அலுவலக தெரு
- போஸ்
- மாஜி அட்ரிகாக்கா
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் போஸ் (65). பாஜ பொதுக்குழு உறுப்பினர். இவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது உசிலம்பட்டி அருகே நல்லதங்காள் கோயில் முதல் குருவிளாம்பட்டி வரை சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில், அப்போதைய உசிலம்பட்டி தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான நீதிபதியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நீதிபதி, ‘‘நீங்கள் பணம் கொடுங்கள். சாலை அமைப்போம். அதன்பின் பணம் வந்ததும் உங்களுக்கு தந்து விடுகிறேன்’’ என போஸிடம் கூறியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து போஸ், அப்பகுதி மக்களிடம் வசூல் செய்து ரூ.10 லட்சத்தை, நீதிபதியிடம் கடந்த 2018ம் ஆண்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. பின்னர் நீதிபதியிடம், போஸ் ரூ.10 லட்சத்தை கேட்டபோது, பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். இதுகுறித்து போஸ், மதுரை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்திருந்தார். இது சம்பந்தமாக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, உசிலம்பட்டி காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். …
The post ரூ.10 லட்சத்தை தர மறுப்பதாக பாஜ நிர்வாகி புகார் மாஜி அதிமுக எம்எல்ஏவிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.