- கருணாகரச்சேரி தொடக்கப்பள்ளி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஸ்ரீ பெரம்புதூர்
- அரசு முதன்மை பள்ளி
- கருணாகரச்சேரி
- தின மலர்
ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புத்தூர், கருணாகரச்சேரியில் உள்ள அரசினர் தொடக்க பள்ளிக்கு ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியை ஸ்ரீ பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார். ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட கருணாகரச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் தொடக்க பள்ளிக்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் தணிகாசலம் வரவேற்றார். ஸ்ரீ பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஸ்ரீ பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கட்டிட பணியை துவக்கி வைத்தார். விழாவில் ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….
The post கருணாகரச்சேரி தொடக்க பள்ளிக்கு ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிட பணி; எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.