×

என்னை மணந்ததால் கணவருக்கு சங்கடம்: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை: திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியது: திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. எங்கு போனாலும் எங்களை புகைப்படம் எடுக்கிறார்கள். அதை நியூஸ் ஆக்கிவிடுகிறார்கள். அது எனக்கு பழகிவிட்டது. ஆனால் ஆண்டனிக்கு பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் எந்த புகாரும் சொல்வது இல்லை. எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார். ஆண்டனி தன் இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக வைத்திருக்கிறார். அவருக்கு தன் புகைப்படங்களை வெளியிடுவதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் எனக்காக அவருடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். மீடியா முன்பு வர கூச்சப்பட்டாலும் எனது கெரியருக்கு இது முக்கியம் என்பதை புரிந்து கொண்டு நடக்கிறார் ஆண்டனி. ஆண்டனி தட்டிலும், கீர்த்தி சுரேஷும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கொரோனா லாக்டவுன் நேரத்தில் இருந்து லிவ் இன் முறைப்படி வாழத் துவங்கினார்கள். கீர்த்தி, ஆண்டனிக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு மட்டுமே அந்த காதல் பற்றி தெரிந்திருந்தது.

Tags : Keerthy Suresh ,Chennai ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்