×

கஞ்சா வழக்கில் கைதானவரை விடுவிக்க கலெக்டரிடம் மனைவி மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கணவரை விடுவிக்கக் கோரி அவரின் மனைவி மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் அரி (32) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் என  4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அரியை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கடந்த வாரம் திங்கட்கிழமை கஞ்சா வழக்கில் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவிக்கின்றனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம், நாங்கள் அனைவரும் அவரின் வருவாயையே நம்பி உள்ளோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார். …

The post கஞ்சா வழக்கில் கைதானவரை விடுவிக்க கலெக்டரிடம் மனைவி மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Aarthi ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...