×

பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புத்தூர் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர்  பரிதாபமாக பலியானார். தாம்பரம் அருகே பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32), இவர் நேற்று பைக்கில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீ பெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சென்றபோது, பின்னால், வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசபட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Sri Perumputhur ,Pallavaram ,Tambaram ,
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...