சிவகங்கை: மதுரை மாவட்டம், கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (40). இவர் மீது இடப்பிரச்னை தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட காவல்துறையிலும், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் உள்ள வழக்கை ரத்து செய்ய, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை ஹக்கீம் அணுகினார். இதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் ஹக்கீம் புகார் செய்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை அலுவலகத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம், ஹக்கீம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ேபாலீசார் இன்ஸ்பெக்டரை கைது செய்தனர். …
The post இடப்பிரச்னை வழக்கை ரத்து செய்ய ரூ.20,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.