- பொன்னேரி
- திருவள்ளூர் மாவட்டம்
- மீம்பூர் ஒன்றியம்
- மீஞ்சூர் வட்டார சுகாதாரம்
- மேற்பார்வையாளர்
- பாலகிருஷ்ணன்
- பலவேகட்
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் பழவேற்காட்டில் கொசு ஒழிப்பு பணியில் மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் வீடு, வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். மீஞ்சூர் ஒன்றியம் கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீலாபாத், தோணிரவு உள்ளிட்ட கிராமங்களுக்கு நேற்று சென்று அங்கு வீடுகளில் பீப்பாய்கள் மற்றும் பெரிய பானைகள், தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர்கள் உள்ளிட்ட பல்வேறு தேங்கும் பொருட்களில் இருக்கக்கூடிய தண்ணீரில் லார்வா மற்றும் பீப்பா உள்ளனவா என பரிசோதித்தனர். இந்த சோதனையின் போது சுகாதார ஆய்வாளர் செல்லம்மாள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்….
The post பழவேற்காட்டில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.