×

நாமகிரிப்பேட்டையில் தக்காளி விலை வீழ்ச்சி-கிலோ ₹8க்கு விற்பனை

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, சிங்கிலியங்கோம்பை, உரம்பு, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள், அதிகளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். சாகுபடிக்கு பின்னர் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, பவானி, ஓசூர், சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்த நிலையில், ஆடி மாதம் நல்ல விலைக்கு தக்காளி விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தக்காளி விலை சரிவால் போதிய கூலி கொடுக்க முடியாததால், அறுவடை செய்வதற்கு தொழிலாளர்கள் வர தயங்குகின்றனர். அதே நேரத்தில், தக்காளியை தினமும் அறுவடை செய்யா விட்டால் அழுகி வீணாகி விடும். இதனால் கடும் சிரமத்துக்கு மத்தியில், அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால், அங்கு போதிய விலை கிடைப்பதில்லை ஒரு கிலோ ₹6 முதல் 8 வரையே விற்பனையாகிறது. சில நாட்களில் விற்பனையாகாமல் வீதியில் கொட்டி விட்டு செல்கிறோம். இதனால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்,’ என்றனர்….

The post நாமகிரிப்பேட்டையில் தக்காளி விலை வீழ்ச்சி-கிலோ ₹8க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Mangalapuram ,Thimmanayakanpatti ,Singiliangombai ,Urambu ,Mulkukurichi ,Metalla ,Dinakaran ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்